24 பிப்., 2010

இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவாளி பிடிபட்டார்

இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த குழு என்று கூறப்படும் ஜுண்டோலா குழுவைச் சேர்ந்த, அப்தொல்மலெக் ரிஜியை, தான் பிடித்துவிட்டதாக இரான் கூறுகிறது.
துபாயிலிருந்து மத்திய ஆசிய நாடொன்றுக்கு விமானம் மூலம் அவர் சென்று கொண்டிருந்த போது, அவர் பயணித்த விமானம் இரானில் இறங்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சிப் படங்கள், முகமூடியணிந்த பாதுகாப்புப்படையினரால், அவர் ஒரு விமானத்திலிருந்து கூட்டிச்செல்லப்படுவதைக் காட்டின.
இந்தக் கைது, ஜுண்டோல்லாவை ஆதரிப்பதாக இரான் குற்றம்சாட்டும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் ஒரு பெரியதோல்வி என்று இரான் கூறுகிறது.
இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. பிரிட்டன், இந்தத் இவரது கைது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய அடி என்று வர்ணித்து வரவேற்றிருக்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவாளி பிடிபட்டார்"

Unknown சொன்னது…

this article shows that western countries are responsible for terror attacks throughout the world

கருத்துரையிடுக