1 மார்., 2010

சசி தரூரின் பேட்டியும் பல்டியும்

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருக்கும் சசி தரூர் அடிக்கடி ஏதேனும் ஒன்றைக் குறித்து பேசுவதும் பின்னர் பல்டியடிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தற்பொழுது 3 நாள் சுற்றுப் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்குடன் உடன் சென்றுள்ள சசி தரூர் சவூதி தலைநகர் ரியாத்தில் பேட்டியளித்த பொழுது, "சவூதி அரேபியா பாகிஸ்தானின் நட்பு நாடு. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதற்கு ஏற்றது சவூதி அரேபியாவாகும்" என்றார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே, இந்தியா-பாகிஸ்தான் இடையே சவூதி அரேபியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை என்று சசி தரூர் மறுத்துவிட்டார். உடனே பா.ஜ.க என்ற பூதமும் சசி தரூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளம்பிவிட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சசி தரூரின் பேட்டியும் பல்டியும்"

கருத்துரையிடுக