31 மார்., 2010

காமன்வெல்த் போட்டிகளுக்கு நல்லெண்ணத் தூதராக அமிதாப்பை நியமிக்கமாட்டோம்: சுரேஷ் கல்மாடி

புதுடெல்லி:அமிதாப் பச்சனை காமன்வெல்த் போட்டிகளுக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கையை ஏற்க காமன்வெல்த் போட்டிகளுக்கான அமைப்புக் குழுத்தலைவர் சுரேஷ் கல்மாடி மறுத்துவிட்டார்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு நடிகரல்ல நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவது என கல்மாடி தெரிவித்தார். காமன்வெல்த் போட்டிகளுக்கு இதுவரை எவரையும் நல்லெண்ணத் தூதராக நியமிக்கவில்லை.

போட்டியின் சின்னமான ஷெரா மட்டுமே தற்போதைய நல்லெண்ணத் தூதர். ஓய்வுப்பெற்ற விளையாட்டு வீரர்களான மில்கா சிங், பி.டி.உஷா போன்றவர்களையோ அல்லது இளைய விளையாட்டு வீரரையோ நல்லெண்ணத் தூதராக நியமிக்க ஆலோசித்து வருவதாக கல்மாடி தெரிவித்தார்.

1982 ஆம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மாதிரியில் நல்லெண்ணத் தூதர் நியமிக்கப்படமாட்டார் எனவும் கல்மாடி தெரிவித்தார்.

மூத்த பா.ஜ.க தலைவரும், இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவருமான வி.கே.மல்கோத்ராதான் பச்சனை நல்லெண்ணத் தூதராக நியமிக்க கோரிக்கை விடுத்தவர். பாலிவுட்டின் வேறு நடிகர்களை நல்லெண்ணத் தூதராக்கும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு கல்மாடி பதிலளிக்கையில், இதுவரை எந்தத் தீர்மானமும் இறுதியாக எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் போட்டிகளுக்கு நல்லெண்ணத் தூதராக அமிதாப்பை நியமிக்கமாட்டோம்: சுரேஷ் கல்மாடி"

கருத்துரையிடுக