11 ஏப்., 2010

தண்டேவாடா:கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கத்தயார்- மாவோயிஸ்டுகள்

புரூலியா:தண்டேவாடாவில் கொல்லப்பட்ட துணை ராணுவப்படையினர் 76 பேர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கத்தயார் என மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

சி.பி.ஐ(மாவோயிஸ்டு) பத்திரிகைகளுக்கு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியில் இதனை தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட துணை ராணுவப்படையினரின் குடும்பத்தினருக்கு மாவோயிஸ்டுகள் அனுதாபம் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க பொதுமக்கள் முன்வரவேண்டுமென்று மவோயிஸ்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபரேசன் க்ரீன் ஹண்டை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் தண்டேவாடா மாதிரியிலான தாக்குதல்கள் இனிமேலும் ஏற்படும் என மவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தண்டேவாடா:கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கத்தயார்- மாவோயிஸ்டுகள்"

கருத்துரையிடுக