பெர்லின்:சிறுவர்களை துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெர்மனியைச் சார்ந்த பிஷப் ஒருவர் போப் பெனடிக்டுக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.
தெற்கு ஜெர்மனியில் ஓக்ஸ்பெர்க் பிஷப் வார்டர் மிக்ஸா தான் சிறுவர்களை துன்புறுத்தியதின் அடிப்படையில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இவர் ஜெர்மன் ராணுவத்திலும் பிஷப்பாக பணியாற்றி வருகிறார்.
1970-80 ஆண்டுகாலக்கட்டத்தில் கத்தோலிக்க அனாதை நிலையத்தில் பணியாற்றிய பொழுது சிறுவர்களை அடித்ததாகவும் மிக்ஸா ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.
மிக்ஸா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. பிஷப்பின் ராஜினாமாவை வாடிகன் ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து தகவல் இல்லை. பாதிரியார்கள் சிறுவர்களை துன்புறுத்துவது உலகமெங்கும் விவாதத்தை கிளப்பிய சூழலில் போப் பெனடிக்ட் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிறுவர்களை துன்புறுத்தல்:ஜெர்மன் பிஷப் ராஜினாமா"
கருத்துரையிடுக