வாஷிங்டன்:மத்தியக்கிழக்கு சமாதான பேச்சுவார்த்தையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு இஸ்ரேலுக்கு வந்துள்ளது.
மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அமெரிக்க குழுவினரின் இஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் நோக்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேலை தூண்டுவதாகும் என அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்க்கோள்காட்டி இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூத்த இயக்குநர் டான் ஷாபிரோ, அமெரிக்காவின் மத்தியக்கிழக்கு தூதரின் உதவியாளர் டேவிட் ஹெய்ன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டெல்அவீவிற்கு வந்துள்ளனர். இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவருடைய சிறப்புத் தூதர் இஸ்ஹாக் மோல்கோ, ஆலோசகர் ரோன் டெர்மர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாஷிங்டனிலிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு உருக்கொடுத்தது. ஃபலஸ்தீன் உள்ளிட்ட மத்தியகிழக்கு பிரச்சனையில் பரிகாரம் காண்பது குறித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தாலும், சமாதான பேச்சுவார்த்தை இதுவரை துவங்கவில்லை.
மேற்கு கரையில் குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் ஃபலஸ்தீன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை. குடியேற்றப் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுவார்த்தை சாத்தியமாகுமா என்பது குறித்துதான் அமெரிக்க முயன்று வருகிறது.
குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்தாமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அமெரிக்காவை பேச்சுவார்த்தையின் நடுவராக அங்கீகரிக்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை எதார்த்தமாகவில்லை என்றால் ஃபலஸ்தீன் நாடு பிரகடனத்தை குறித்து ஆலோசிக்க வேண்டும் என ஹமாஸ் நேற்று முன்தினம் ஃபலஸ்தீன் அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ரகசிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க குழு இஸ்ரேலுக்கு விஜயம்"
கருத்துரையிடுக