புதுடெல்லி:கொச்சி ஐ.பி.எல் அணியை அஹ்மதாபாத்திற்கு மாற்றுவதற்கு லலித் மோடி முயற்சித்தது முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமைத் தாங்கிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வற்புறுத்தலால்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
கொச்சி அணியில் பங்குகளை வாங்கியுள்ள குஜராத் தொழில் அதிபர்களுக்கும் இத்தகையதொரு விருப்பம் இருந்தது. இதற்காக அவர்கள் மத்திய அமைச்சர் சரத்பவாரையும், குஜராத் நரேந்திரமோடியையும் சந்தித்தனர்.
ஆனால் ஏலத்தில் தோற்கப் போகிறோம் என்ற உறுதி ஏற்பட்டதும் இவர்கள் சசி தரூரை சந்தித்துள்ளனர். தரூரோ இவ்வணியை கொச்சிக்கு மாற்றிவிட்டார். கொச்சி அணியின் பங்குதாரர்கள் தன்னை சந்தித்ததாக சரத்பவார் உறுதிச்செய்திருந்தார். ஒருக்கட்டத்தில் கொச்சிக்கும் அஹ்மதாபாத்திற்குமிடையே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது ரொண்டேவ் ஸ்பொர்ட்ஸ் வேர்ல்ட்.
சசி தரூர் தலையிட்டதும் இவர்கள் கொச்சிக்கு ஆதரவாளரானார்கள். ரோஸி ப்ளூடயமண்ட்சின் ஹர்ஷத் மேத்தா, ஆங்கர் எர்த்தின் மேஹுல் ஷா ஆகியோர் நரேந்திரமோடியுடனும், சரத்பவாரிடனும் சந்திப்பை நடத்தியுள்ளனர். இவர்களிருவருக்கும் கொச்சி அணியில் 38 சதவீத பங்குகள் உள்ளன. இதர பங்குதாரர்களான பாரினி டெவலப்பேர்ஸின் விபுல் ஷா, ஸ்ரீராம் குரூப்பின் முகேஷ் பட்டேல் ஆகியோர் குஜராத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கும் அஹ்மதாபாத்திற்கு ஐ.பி.எல் அணியைக் கொண்டுச் செல்லத்தான் ஆர்வம்.
ஒரேயொரு கிரிக்கெட் மைதானம் உள்ள கேரளத்திலிலுள்ள நகரின் பெயரில் அணியைக் கொண்டுவருவது லாபத்தை தராது என்பது இவர்களது பிரச்சனை. இதற்கு மோடிகளின் ஆதரவும் இருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "லலித் மோடிக்குப் பின்னணியில் நரேந்திரமோடி"
கருத்துரையிடுக