27 ஏப்., 2010

ராஜஸ்தான் ஆளுநர் வழுக்கி விழுந்து மரணம்

டெல்லி வந்திருந்த ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரபா ரவு விருந்தினர் இல்லத்தில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் அம்மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். 74 வயதான பிரபா, கடந்த ஜனவரி மாதம் தான் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பணி நிமித்தமாக டெல்லி வந்த அவர் அங்குள்ள ராஜஸ்தான் மாநில விருந்தினர் இல்லமான ஜோத்பூர் ஹவுசில் தங்கினார்.

இந்நிலையில் நேற்று காலை 11மணியளவில் அவர் குளியலறைக்குச் சென்றார். நெடு நேரமாகியும் திரும்பாததால் அவரது உதவியாளர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தார்.

இதையடுத்து அவர் எஸ்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகி்ச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராஜஸ்தான் ஆளுநர் வழுக்கி விழுந்து மரணம்"

கருத்துரையிடுக