26 ஏப்., 2010

ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் நேட்டோவின் டேங்கர்கள் மீது தாக்குதல்: மக்கள் ஆவேசம்

காபூல்/இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் நேட்டோ வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. மோதலில் 3 போலீஸார் கொல்லப்பட்டு 11 டாங்கர்கள் தகர்க்கப்பட்டன.

அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் அட்டூழியத்தை கண்டித்து ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் எண்ணெய் டாங்கர்கள் தாக்கி தீவைக்கப்பட்டன. காபூலுக்கு அருகிலிலுள்ள லூகார் மாகாணத்தில் பூலியாலமில் இச்சம்பவம் நடைபெற்றது.

அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடுஇரவில் அப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து மூன்று பேரை சுட்டுக் கொன்றனர். இதனைக் கண்டித்து மக்கள் கொந்தளித்து தெருவில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையில் தடை ஏற்படுத்தி அவ்வழியாக வந்த நேட்டோவின் 5 டேங்கர்களை தீக்கிரையாக்கினர். பின்னர் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை விலக்கியது. இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த மாகாண கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமையும் நேட்டோ ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அநியாயமாக ஐந்து சிவிலியன்களை சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தானில் நேட்டோ எண்ணெய் டேங்கர்கள் மீது நடந்த தாக்குதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டனர்.ஆஃப்கான் எல்லைப் பகுதியான அக்வால் மாவட்டத்தில்தான் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆப்கானிஸ்தானிற்கு நேட்டோ ஆக்கிரமிப்பு படையினருக்கு அத்தியாவசிய பொருட்களுடன் சென்றுக் கொண்டிருந்த டேங்கர்கள் தான் மியான்வாலி-தலகாங் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஒரு போராளிகள் குழுவால் தாக்கப்பட்டது. அக்வாலில் பெட்ரோல் பம்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர்கள் மீது தாக்குதல் நடந்தது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு வந்த போலீசார் மீது நடந்த தாக்குதலில் மூன்று போலீசார் மரணித்தனர்.இன்னொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் 30 நிமிடங்கள் நீடித்தது என்றும் ஆறு டேங்கர்கள் தீக்கிரையாயின எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் நேட்டோவின் டேங்கர்கள் மீது தாக்குதல்: மக்கள் ஆவேசம்"

கருத்துரையிடுக