20 மே, 2010

ஆப்கான்:நேட்டோ படையினரின் மரண எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

காபூல்:ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நேட்டோ அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் மரண எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த தாலிபான் போராளிகள் தாக்குதலில் 6 நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினரால் ஆக்கிரமிப்புற்கு உள்ளாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் முதல் 7 வருடங்களில் நேட்டோ படையினரின் மரண எண்ணிக்கை 500 ஆக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரையிலான மரண எண்ணிக்கை 1020 ஆகும். இந்த ஆண்டு மட்டும் 210 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோனார் அமெரிக்க படையினராவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கான்:நேட்டோ படையினரின் மரண எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது"

கருத்துரையிடுக