20 மே, 2010

ஷார்ஜா:மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களின் விசாரணை ஒத்திவைப்பு

ஷார்ஜாவில் கொலைவழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களின் விசாரணையை ஷார்ஜா அப்பீல் நீதிமன்றம் ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைத்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட பஞ்சாபி மொழி பேசும் வழக்கறிஞரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 16 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். ஒருவர் ஹரியானாவைச் சார்ந்தவராவார்.

மூன்று குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குடிமகன் மஸ்ரிஹ் கானை கொடும் ஆயுதங்கள் மூலம் கொலை செய்தது. முஹம்மது நவாஸ், முஷ்தாக் அஹ்மத், ஷாஹித் இக்பால், ராஜா கங்காராம் ஆகியோரை கொலை செய்யும் நோக்கத்துடன் கடுமையான காயங்களை ஏற்படுத்தியது, சட்டவிரோதமாக ஷார்ஜாவில் மதுபானத்தை விற்பனைச் செய்தது ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜா:மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களின் விசாரணை ஒத்திவைப்பு"

கருத்துரையிடுக