15 மே, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது

இந்தூர்:அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் இரவு வேளையில் இவன் கைதுச்செய்யப்பட்டான்.

இந்தூரைச் சார்ந்த சர்மா என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதி காங்கிரஸ் தலைவர் ப்யார்சிங் நைநாமாவைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாவான் என போலீஸ் கூறுகிறது.

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிந்த்வாரா மாவட்டத்தில் மண்பூர் பகுதியில் வைத்து நைநாமா கொல்லப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சர்மா ஜாமீனில் வெளியே வந்துள்ளான். நைநாமா கொலை வழக்கில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியும் குற்றவாளியாவான்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் குற்றவாளியான சுனில் ஜோஷி மத்தியபிரதேச மாநிலத்தில் திவாஸ் மாவட்டத்தில் வைத்து 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டான்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சந்திரசேகர் பரோத், விஷ்ணு பதிதர் ஆகியோரை ஷாஜபூர் மாவட்டத்தில் வைத்து ஏ.டி.எஸ் ஏற்கனவே கைதுச் செய்திருந்தது.

பதிதரை விடுவித்த போதிலும் பரோதை போலீஸ் கைதுச் செய்தது. இவனுக்கு 21 ஆம் தேதி வரை ரிமாண்ட் நீட்டப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது"

கருத்துரையிடுக