சென்னை:பேச்சுரிமை என்ற போர்வையில் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,
தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள்.அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன.ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும்.இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,
தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள்.அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன.ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும்.இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.
0 கருத்துகள்: on "இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரை தண்டிக்க புது சட்டம்"
கருத்துரையிடுக