மும்பை,ஜுலை29:'இயற்பியல் ஒலிம்பிக்' என்ற சர்வதேச இயற்பியல் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிர்களுக்கு தீர்வு கண்டு பிடிப்பதே போட்டியின் முக்கிய அம்சமாகும். இதில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம்.

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இயற்பியல் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை.
இந்த போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் ஆகியவையும் கிடைத்தன.
அசான்ஷா இந்த ஆண்டு தான் பிளஸ்-2 முடித்தார். ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் அவர் இந்தியாவில் 18-வது இடத்தை பிடித்தார்.
ஆனாலும் அவர் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேரவில்லை. அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் சேர போவதாக அறிவித்து உள்ளார்.
0 கருத்துகள்: on "'சர்வதேச இயற்பியல் ஒலிம்பிக் போட்டி': இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்"
கருத்துரையிடுக