13 ஆக., 2010

ஈரான் அணு உலைகள் மீது 100 விமானங்களை அனுப்பி குண்டு வீச இஸ்ரேல் திட்டம்: அமெரிக்க பத்திரிகை தகவல்

ஆக,13:அமெரிக்காவின் தடை மற்றும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஈரான் தன் சொந்த தேவைக்காக அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

மேலும் ஈரான் அணுசக்தி மூலம் குண்டு தயாரித்தால் அதை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று இஸ்ரேல் பயப்படுகிறது. எனவே ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் கூறியது. இதைத்தடுக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

எனவே ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்பு இதே போல ஈராக் அணுகுண்டு தயாரிக்க முயற்சித்தபோது இஸ்ரேல் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலையை தகர்த்தது.

அதே போல இப்போது ஈரான் அணு உலைகளை அளிக்க இஸ்ரேல் தயாராகி இருப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இதற்காக உயர்ரக 100 போர் விமானங்களை தயாராக வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமானங்களை சவுதிஅரேபியா அல்லது துருக்கி எல்லை வழியாக அனுப்பி ஈரான் அணு உலைகளை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஈரானில் நதான்ஸ், குவாம், எஸ்பகான், புஷேர் ஆகிய இடங்களில் அணுஉலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் வகையில் விரிவான திட்டங்களை உருவாக்கி உள்ளனர். என்றும் அச்செய்தி கூறுகின்றது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரான் அணு உலைகள் மீது 100 விமானங்களை அனுப்பி குண்டு வீச இஸ்ரேல் திட்டம்: அமெரிக்க பத்திரிகை தகவல்"

கருத்துரையிடுக