4 ஆக., 2010

அணு ஆலை விபத்து இழப்பீட்டு தொகையை ரூ.1000 கோடியாக உயர்த்த பார்லிமெனட் குழு சிபாரிசு

புதுடில்லி:ஆக,4:அணு ஆலைகளில் விபத்து ஏற்பட்டால்,அதில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மசோதா கடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.500 கோடியை மத்திய அரசு நிர்ணயித்தது.

ஆனால் இதனை ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.இதுதொடர்பாக விவாதிக்க சுப்பிராமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது அந்த குழு மசோதாவில் குறிப்பிட்ட ரூ.500 கோடியை ரூ.1000 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

இதில் ரூ.500கோடியை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்க தயார் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணு ஆலை விபத்து இழப்பீட்டு தொகையை ரூ.1000 கோடியாக உயர்த்த பார்லிமெனட் குழு சிபாரிசு"

கருத்துரையிடுக