4 ஆக., 2010

ஊடகங்கள் முன்னிலையில் ஒபாமாவை விவாதத்திற்கு அழைக்கும்

டெஹ்ரான்,ஆக4:ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தன்னுடன் நேருக்கு நேரான தொலைகாட்சி விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அஹமதி நிஜாத் கூறும்போது;"நான் வரும் செம்டெம்பர் மாத இறுதியில் நியூயார்கில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளேன் அங்கு பராக் ஒபாமாவை சந்திக்க தயாராகவுள்ளேன் அத்துடன் அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கவும் உள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெற வேண்டுமெனவும் யாருடைய விவாதம் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட வேஎண்டியது என்பதை பார்க்கவேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பல விவாதத்திற்கான அமைப்புகள் முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கும் அஹமதி நிஜாத் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஊடகங்கள் முன்னிலையில் ஒபாமாவை விவாதத்திற்கு அழைக்கும்"

கருத்துரையிடுக