13 ஆக., 2010

குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு

கெய்ரோ,ஆக,13:பெண்டகனும்,உலக வர்த்தக மையமும் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள ஒரு சர்ச்சில் புனித திருக்குர்ஆனின் பிரதியை தீவைத்துக் கொளுத்த திட்டமிட்டுள்ளதை உலகின் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.

வெறுப்பைத் தூண்டும், பாரபட்சமான நடவடிக்கையை ஃப்ளோரிடாவிலுள்ள கய்னஸ்வில் சர்ச் திட்டமிட்டுள்ளது என அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சுப்ரீம் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இச்சம்பவத்தை அமெரிக்காவிலுள்ள இதர கிறிஸ்தவ சபைகள் கண்டிக்கவேண்டுமென்றும், கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், அச்சம்பவத்தை நினைவுகூறுவதற்காகவும் கிறிஸ்தவ சர்ச் இத்தகையதொரு மிக மோசமானதொரு திட்டம் தீட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அதனை இணையதளத்திலும் பிரசுரித்தனர். இஸ்லாத்திற்கெதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டுகள் ஏற்கனவே கய்னஸ்வில் சர்ச் வெளியிட்டது விவாதத்தை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு"

கருத்துரையிடுக