11 ஆக., 2010

ஃபலஸ்தீனர்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவில் கட்டுப்பாடு

டெல்அவீவ்,ஆக11:மேற்கரையிலிருந்து முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ தொழுகைக்காக வருவதற்கு இஸ்ரேல் கட்டுப்பாடு ஏற்படுத்தியுள்ளது.

50 வயதைத் தாண்டிய ஆண்களையும், 45 வயதைத் தாண்டிய பெண்களையும் மட்டும்தான் சிறப்பு அனுமதியில்லாமல் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெருசலத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும்.

இஸ்ரேலிலுள்ள அரபிகளுக்கும், கிழக்கு ஜெருசலத்தில் வசிப்போருக்கும் கட்டுப்பாடில்லை.

2000-ஆம் ஆண்டில் நடந்த இன்திஃபாழா துவங்கியது மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்தாகும். அதற்கு பிறகு மேற்குகரையிலுள்ளவர்கள் ஜெருசலத்தில் நுழைவதற்கு பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

காஸ்ஸா மக்களுக்கு மிக அபூர்வமாகவே ஜெருசலத்தில் நுழைய அனுமதியளிக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் இஸ்ரேல் ஏற்படுத்திய கட்டுப்பாடு காரணமாக ஃபலஸ்தீன் முஸ்லிம்களுக்கும், இஸ்ரேலிய ராணுவத்திற்குமிடையே பல முறை மோதல் ஏற்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனர்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவில் கட்டுப்பாடு"

கருத்துரையிடுக