24 அக்., 2010

ஐ.நா மையத்தில் தாலிபான் தாக்குதல்: நான்குபேர் மரணம்

காபூல்,அக்.24:மேற்கு ஆப்கானில் வணிக மையமான ஹெராத்தில் ஐ.நா தலைமையகத்தில் தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

கட்டிடத்திற்குள் ஏராளமான போராளிகள் நுழைந்துள்ளனர். நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐ.நா அதிகாரிகளும், போலீஸாரும் காயமடைந்துள்ளனர். கட்டிடத்தை போலீசாரும், ராணுவமும் சுற்றி வளைத்துள்ளன.

தாக்குதல் நடந்த விபரத்தை காபூலில் ஐ.நாவின் செய்தித் தொடர்பாளர் கிரன் டையர் உறுதிச்செய்தார். தாக்குதலின் பொறுப்பை தாலிபான் கமாண்டர் முல்லா பிலால் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே இரண்டு மாணவர்களை அமெரிக்க படையினர் கொன்றதைக் கண்டித்து ஆப்கானில் பிரம்மாண்டமான கண்டனப் பேரணி நடைப்பெற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐ.நா மையத்தில் தாலிபான் தாக்குதல்: நான்குபேர் மரணம்"

கருத்துரையிடுக