8 நவ., 2010

அயோத்தியில் அனைத்து மத நல்லிணக்க மையம்

ஃபைஸாபாத்,நவ.8:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்திற்கு அருகில் அனைத்து மத நல்லிணக்க மையம் கட்டப்படவிருக்கிறது.

ஏழு மாடி கட்டிடத்தில் மஸ்ஜித், சர்ச், புத்தமையம், குருத்வாரா, ஜைன மையம், கோயில் ஆகியவற்றுடன் மத பாராளுமன்றமும் செயல்படும்.

சுவாமி அக்னிவேஷ், அஸ்கர் அலி எஞ்சினீயர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரின் ஆதரவுடன் சரயூ குஞ்ச் கோயில் நிலத்தில் இந்த மையம் நிர்மாணிக்கப்படும்.

இந்த மையத்தின் மாதிரி மனித உரிமை தினமான டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அயோத்தியில் அனைத்து மத நல்லிணக்க மையம்"

கருத்துரையிடுக