4 நவ., 2010

கஷ்மீருக்கு போராளிகள் தேர்வு வழக்கு: புகைப்படத்தை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

கொச்சி,நவ.4:கஷ்மீருக்கு போராளிகளை தேர்வுச்செய்து அனுப்பியதாக கூறப்படும் வழக்கில் கூறப்படும் கஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட நான்கு கேரள இளைஞர்களின் புகைப்படங்களை ஆஜர்படுத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரணித்தவர்களின் புகைப்படம் கைவசம் உள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்துதான் இவ்வுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. வழக்கு மீண்டும் வருகிற 16-ஆம் தேதி விசாரணைக்கு வரும். மரணித்தவர்களில் இரண்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், இரண்டு பேரை அடையாளம் காணமுடியவில்லை எனவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீருக்கு போராளிகள் தேர்வு வழக்கு: புகைப்படத்தை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக