15 நவ., 2010

விவாத அறிக்கை:ஆர்.எஸ்.எஸ் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டது - கோவிந்தாச்சார்யா

இந்தூர்,நவ.15:காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு எதிராக அவதூறான விமர்சன அறிக்கையை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் சர்சங்க்சாலக் கு.சி.சுதர்சன் தனது பதவியின் மதிப்பிற்கு கேடு ஏற்படுத்தியதோடு ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டார் என முன்னாள் சங்க்பரிவார சித்தாந்தவாதியான கெ.என்.கோவிந்தாச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதர்சன் சோனியாவுக்கெதிராக எழுப்பிய கேள்விகளைக் குறித்து கூறவோ, சங்க்பரிவாரின் கலாச்சாரத்தோடு சுதர்சனின் விமர்சனத்தை தொடர்புப்படுத்தவோ தான் விரும்பவில்லை.

சுதர்சனின் விமர்சனத்திற்கு சங்க்பரிவார் வருத்தம் தெரிவித்தது சரியான நடவடிக்கையாகும். இவ்வாறு கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விவாத அறிக்கை:ஆர்.எஸ்.எஸ் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டது - கோவிந்தாச்சார்யா"

கருத்துரையிடுக