10 நவ., 2010

'ஒரு இந்திய கம்யூனிஸ்டை சந்தித்ததில் மகிழ்ச்சி' சீதாராம் யெச்சூரியிடம் ஒபாமா

புதுடெல்லி,நவ:"ஒரு இந்திய கம்யூனிஸ்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. கம்யூனிஸ்டுகள் இந்திய தேசிய அரசியலில் ஒரு பகுதி என நான் கேட்டுள்ளேன்" -இது ஒபாமா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருந்தின்போது சி.பி.எம் தலைவர் சீதாராம் யெச்சூரியிடம் தெரிவித்ததாகும்.

திங்கள் கிழமை மாலையில் நடைப்பெற்ற விருந்து நிகழ்ச்சியில் சந்தித்த இருவரும் கைக் குலுக்கிக் கொண்டனர்.

தேசிய அரசியல் முழுவதிலும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு உண்டு என யெச்சூரி ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு இடதுசாரிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகளின் தலைவர்கள் ஒபாமாவின் பாராளுமன்ற உரையை கேட்பதற்காக வருகைப் புரிந்திருந்தனர்.

ஆனால் இடதுசாரி கட்சிகளில் ஒன்றான பார்வர்டு ப்ளாக் ஒபாமாவின் உரையை புறக்கணித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'ஒரு இந்திய கம்யூனிஸ்டை சந்தித்ததில் மகிழ்ச்சி' சீதாராம் யெச்சூரியிடம் ஒபாமா"

கருத்துரையிடுக