14 நவ., 2010

ஆர்.எஸ்.எஸ்ஸும் லஷ்கரும் ஒன்றுதான் - திக் விஜய்சிங்

புதுடெல்லி,நவ.14:ஆர்.எஸ்.எஸ்ஸும் லஷ்கர்-இ-தய்யிபாவும் ஒரேபோல்தான் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் நாக்பூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தடைச் செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் 125 துணை அமைப்புகளும் செயல்படுகின்றன. லஷ்கர்-இ-தய்யிபாவை பாகிஸ்தான் தடைச் செய்த பிறகும் அவ்வமைப்பு ஜமாஅத்துத்தஃவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

சோனியாகாந்திக்கெதிராக சுதர்சனின் விமர்சனத்தைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தாக்குதல்கள் எதேச்சையானதாகும்.

சோனியாக்காந்திக்கு எதிரான சுதர்சனின் மோசமான விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கலாச்சாரத்தால் உருவானதாகும். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்.எஸ்.எஸ்ஸும் லஷ்கரும் ஒன்றுதான் - திக் விஜய்சிங்"

கருத்துரையிடுக