6 ஜன., 2011

உலகில் அதிகமாக நிராசையடைந்த மக்கள் பிரான்சு நாட்டவர் என தகவல்

லண்டன்,ஜன.6: 2011-ம் வருடத்தை முற்றிலும் நம்பிக்கையில்லாமல் எதிர்கொள்ளும் மக்களில் பிரான்சு நாட்டவர்களுக்கு முதலிடம்.

அதேவேளையில் வளரும் நாடுகளைச் சார்ந்த மக்கள் புது வருடத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

பி.வி.எ-காலப் என்ற நிறுவனம் 53 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. அதில் பிரான்சு நாட்டவர் 61 சதவீதம் பேரும் நம்புவது 2011 ஆம் ஆண்டு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வருடமாக நம்புகின்றனர். பிரிட்டனில் 52 சதவீதம் பேர் 2011 ஆம் ஆண்டைக் குறித்த அவநம்பிக்கையில் உள்ளனர். ஸ்பெயின் 48 சதவீதம், இத்தாலி 41 சதவீதம் என அவநம்பிக்கை பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

டெய்லி மெயில் என்ற பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரிக்கும் என பிரான்சைச் சார்ந்த 67 சதவீத மக்களும் நம்புகின்றனர். வேலைதான் பிரிட்டீஷாரின் முக்கிய கவலை. 74 சதவீத பிரிட்டன் வாசிகளும் நிராசையில் உள்ளனர்.

வேலைவாய்ப்பின்மை குறித்த நிராசையில் பாகிஸ்தான் அடுத்த இடத்தை வகிக்கிறது. அங்கு 72 சதவீத மக்கள் வேலையைக் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அதேவேளையில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளான இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் வாழும் 49 சதவீத மக்களும் புதுவருடத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்கின்றனர். இந்த நாடுகளில் 14 சதவீத மக்கள் மட்டுமே கஷ்டத்தை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

2011 ஆம் ஆண்டைக் குறித்த தன்னபிக்கையில் முதலிடம் வகிப்பது வியட்நாம் நாட்டைச் சார்ந்தவர்களாவர். புதுவருடம் பொருளாதார வெற்றியின் ஆண்டாக மாறும் என 70 சதவீத வியட்நாம் வாசிகளும் கருதுகின்றனர்.

2010 அக்டோபர் 11 முதல் டிசம்பர் 13 வரை ஆன்லைனிலும் நேரடியாகவும் 53 நாடுகளில் 63000 பேர்களிடம் நேர்முகம் நடத்தி இந்த கருத்துக்கணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகில் அதிகமாக நிராசையடைந்த மக்கள் பிரான்சு நாட்டவர் என தகவல்"

கருத்துரையிடுக