6 பிப்., 2011

ரெயிலிருந்து கீழே தள்ளப்பட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண் மரணம்

திருச்சூர்(கேரளா),பிப்.6:ஓடும் ரெயிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு பின்னர் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சவும்யா(23). திருமணம் ஆகாத இவரை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வருவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி எர்ணாகுளம்-சொர்ணூர் பயணிகள் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

திருச்சூரை தாண்டியவுடன் அவர் இருந்த பெட்டியில் வேறு எவரும் இல்லை. இந்நிலையில் வள்ளதோள் நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றுவிட்டு புறப்பட்ட வேளையில் வாலிபர் ஒருவர் பெட்டிக்குள் தாவி ஏறி அங்கு தனிமையிலிருந்த சவும்யாவிடம் இருந்த பையை வாங்க முயற்சித்தார். இதனை
தடுத்த சவும்யாவை அவ்வாலிபர் ரெயிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.

பின்னர் தானும் குதித்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சவும்யாவை வன்புணர்வுக்கு ஆளாக்கினர் அந்த வெறிப்பிடித்த வாலிபர். சவும்யா ரெயிலிலிருந்து கீழே விழுந்ததைக் கண்ட ரெயில்வே காவலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமாகயிருந்த சவும்யா இன்று மதியம் மரணமடைந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரெயிலிருந்து கீழே தள்ளப்பட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண் மரணம்"

கருத்துரையிடுக