23 பிப்., 2011

உச்சநீதிமன்​றத்தில் மேல்முறையீடு செய்ய கசாப் முடிவு

மும்பை,பிப்.23:மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட அஜ்மல் கசாப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபர்ஹானா ஷா தெரிவித்தார்.

இன்று பிற்பகலில் சிறையில் கசாபை ஃபர்ஹானா சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப் விருப்பம் தெரிவித்ததாக ஃபர்ஹானா கூறினார்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும் , உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அவருக்கு உள்ள உரிமை குறித்தும் கசாபிடம் தெரிவித்ததாக ஃபர்ஹானா குறிப்பிட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உச்சநீதிமன்​றத்தில் மேல்முறையீடு செய்ய கசாப் முடிவு"

கருத்துரையிடுக