25 பிப்., 2011

நிலைத்தடுமாறும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.25:ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக லிபியாவில் மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி.

தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கொலை வெறித்தனமாக பேட்டிக்கொடுத்த அவர், தற்போது மக்கள் எழுச்சியை திசை திருப்பும் முகமாக லிபியாவில் போராட்டத்தை வழி நடத்துவது அல்காயிதா என புழுகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: "தெளிவாக தெரிகிறது லிபியாவின் தற்போதையை பிரச்சனையை வழி நடத்துவது அல்காயிதாதான் என. 20 வயதுக்கு மேற்பட்டோர் எவருமே இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ளவில்லை. இளைஞர்களை அல்காயிதா வன்முறைக்காக தூண்டுகிறது." என கூறுகிறார் கத்தாஃபி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நிலைத்தடுமாறும் கத்தாஃபி"

கருத்துரையிடுக