1 பிப்., 2011

எனக்கு எதிராக சூனியம் செய்கின்றார்கள் - எடியூரப்பா புலம்பல்

மைசூர்,பிப்:எதிர்கட்சியினர் மந்திரவாதிகள் மூலம் எனக்கு சூனியம் செய்து அழிக்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என கர்நாடக நில ஊழல் புகழ் முதல்வர் எடியூரப்பா புலம்பியுள்ளார்.

மாநில தலைமைச் செயலக கூட்டத்திற்கு பிறகு தான் திரும்பி வருவேனா? என்பது உறுதியில்லை என கூறியுள்ளார் அவர். ஆனால், அதேவேளையில், மந்திரவாதத்தால் என்னை எவரும் அடிபணிய வைக்கமுடியாது எனவும் தெரிவிக்கிறார் அவர்.

காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவின் பேச்சைக் குறித்து கிண்டலடித்துள்ளது. முதல்வர் பதவியிலிருக்கும் எடியூரப்பா பழையகால மனோநிலையில் வாழ்ந்து வருகிறார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எனக்கு எதிராக சூனியம் செய்கின்றார்கள் - எடியூரப்பா புலம்பல்"

கருத்துரையிடுக