2 மார்., 2011

பாகிஸ்தான்:அமெரிக்க உளவாளிகள் 4 பேர் படுகொலை

இஸ்லாமாபாத்,மார்ச்.2:வடக்கு வஸீரிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகளை போராளிகள் கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்காக இவர்கள் உளவு வேலையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிரன்ஸாஹ் நகரத்தில் நேற்று காலை குண்டடிப்பட்டு இறந்த நிலையில் 4 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க உளவாளிகளின் கதி இதுதான் என எழுதப்பட்ட குறிப்பு அவர்களின் உடல்களுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. போராளிகள் குறித்து தகவல்களை அளிக்க ஆப்கானிஸ்தானைச் சார்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து அமெரிக்க ராணுவம் பயன்படுத்துவது உண்டு. இத்தகைய நபர்களை கண்டறிந்து முன்னரும் இதுபோல பாகிஸ்தான் போராளிகள் கொலை செய்துள்ளனர்.

போராளிகளின் ரகசிய இடங்கள் குறித்து பாகிஸ்தான் போலீஸ் மற்றும் அமெரிக்க ராணுவத்தினருக்கு தகவல்கள் அளித்ததாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய நபர்கள் அளிக்கும் தகவல்கள் மூலம் அமெரிக்கா ஆளில்லா விமானத்தாக்குதலை அப்பகுதிகளில் நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான்:அமெரிக்க உளவாளிகள் 4 பேர் படுகொலை"

கருத்துரையிடுக