1 மார்., 2011

விமானக் கட்டணத்தை உயர்த்தியது பொருத்தமற்ற நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேரவை கண்டனம்

கோழிக்கோடு,மார்ச்.1:வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு சலுகைகளை அறிவிப்பதற்கு பதிலாக விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நியாயப்படுத்த முடியாது என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பேரவையின் தலைவர் பி.அஹ்மத் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சமூகத்தை மறந்துவிட்டு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தயாரித்துள்ளார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான போதுமான நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமில்லை. சொந்த தேசத்திற்காக வெளிநாட்டு நாணயத்தை அள்ளித் தரும் சமூகத்தை மறந்துபோன நிதிநிலை அறிக்கை என பி.அஹ்மத் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "விமானக் கட்டணத்தை உயர்த்தியது பொருத்தமற்ற நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேரவை கண்டனம்"

Unknown சொன்னது…

erkanave tamilnattu makkal indiya vimaana sevaiyai adiham payanpaduthuvathu illai, ithil vimana kattanathai athiha paduthinaal indiya vimaana thuraikkuthaan nastam erpadum vaaipu ullathu.

Haja T.P

கருத்துரையிடுக